உலகம்

இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய வகை- அதிவேகமாக பரவுவதாக அரசு எச்சரிக்கை!

Published

on

இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று பரவுவதாகவும், இது முன்னர் தோன்றிய வைரஸைவிட அதிகவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி உறுதிபடுத்தியுள்ளார். 

இந்த அதிர்ச்சிகர கண்டுபிடிப்பு குறித்து இங்கிலாந்து அரசு தரப்பு, உலக சுகாதார அமைப்பிடமும் தெரியப்படுத்தியுள்ளது. சீக்கிரமே உலக சுகாதார அமைப்பு, இது குறித்து இங்கிலாந்துக்குச் சென்று விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. இங்கிலாந்தின் தென் பகுதியில் இந்த புதுவித வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த மாதம் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது மிக அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு இந்தப் புதிய வைரஸ் தொற்றும் ஓர் காரணம் என்று தெரிகிறது. இந்த புதுவித வைரஸால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்குமா என்பது குறித்து இதுவரை உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. இது புது வைரஸ் காரணமாக இங்கிலாந்தின் வேல்ஸ் மற்றும் வடக்கு ஐயர்லாந்துப் பகுதிகளில் இந்த மாதம் முடிவடைந்தவுடன் புதிய லாக்டவுன் விதிமுறைகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது. சீக்கிரமே இங்கிலாந்து முழுவதும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் அமல் செய்யப்படலாம் என்றும் தகவல். 

seithichurul

Trending

Exit mobile version