சினிமா செய்திகள்

ராஜமெளலி படத்தில் இருந்து விலகிய இங்கிலாந்து நடிகை.. காரணம் என்ன தெரியுமா?

Published

on

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராம்சரன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர் ஆர் ஆர் படத்தை பாகுபலி இயக்குநர் ராஜமெளலி உருவாக்கி வருகிறார்.

பான் இந்தியா படமாக உருவாக்கப்படும் இந்த படத்தில் பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பாட், சமுத்திரகனி மற்றும் இங்கிலாந்து நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட டெய்சி எட்கர் ஜோன்ஸ் படத்தில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.

ராஜமெளலி படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்காதா என உலகில் பல நடிகர்கள் ஏங்கி தவிக்கும் நிலையில், இப்பேர்பட்ட வாய்ப்பை ஏன் டெய்சி தவிர்த்தார் என பல கேள்விகள் எழுப்பட்டன. கேள்விகளை தொடர்ந்து பல்வேறு வதந்தி தகவல்களும் காட்டுத்தீயாய் பரவின.

இந்நிலையில், தனது குடும்ப சூழல் காரணமாக ராஜமெளலி படத்தில் இருந்து விலகும் சூழல் உருவாகி உள்ளது. இவ்வளவு பெரிய வாய்ப்பை இழப்பது என் வாழ்வில் மிக மோசமான நடவடிக்கை என்பதை நான் அறிவேன். எனக்கு வழங்கப்பட்ட ரோலில் எந்த பெண் நடித்தாலும், அவரது கேரியர் உச்சத்துக்கு செல்லும் என்றும். படக்குழுவுக்கு தனது வாழ்த்துகள் என்றும் டெய்சி விளக்கமளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version