தமிழ்நாடு

சட்டத்தை மீறிய உதயநிதி ஸ்டாலின்.. கைது செய்யப்படுவாரா? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

Published

on

திமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்தை மீறி தூத்துக்குடி பயணம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் மீது காவல் துறையினர் தாக்கியதால் தந்தை, மகன் இருவரும் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தைச் சந்திக்க திமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இன்று சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்று வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக, தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாரா என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version