சினிமா செய்திகள்

’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்

Published

on

’கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு தவறு நடந்திருப்பதாகவும் அந்த தவறை திருத்திக் கொள்ளுமாறு இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர்கள் ஒரிரு நாளில் திருத்திவிடுவதாக பதில் கூறியதாகவும் உதயநிதி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை பெரும்பாலானோர் பாராட்டினாலும் ஒரு சிலர் இந்தப் படத்தின் கதை நடந்த காலத்தில் அதிமுக ஆட்சி இருந்தது என்றும் ஆனால் திமுக ஆட்சியில் நடந்தது போன்று காண்பிக்கப்பட்டு இருந்ததாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்

இதனையே உதயநிதி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு அந்த தவறை சரி செய்யுமாறு படக்குழுவினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

மேலும் 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி. என உதயநிதி பதிவு செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version