தமிழ்நாடு
உதயநிதி பேனரை பார்த்து குமுறிய நபர்.. உதயநிதியின் பதிலை பாருங்க!
![3 (11) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/3-11.jpg)
சென்னை: உதயநிதி ஸ்டாலின் தனது கட் அவுட் ஒன்று மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் தற்போது கட் அவுட் கலாச்சாரம் பெரிதாகி உள்ளது. அரசியல் நிகழ்வுகள் தொடங்கி அனைத்திற்கும் கட் அவுட் வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் டிவிட்டரில் ஒருவர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் உள்ள கட் அவுட் புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
அதில் ”எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம்.” என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில் ”தவறு.. மீண்டும் நடக்காது.. ?” என்று கூறியுள்ளார்.