தமிழ்நாடு
தேர்தலில் போட்டி: உதயநிதி சூசகம்!
![Udhayanidhi and DMK - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/Udhayanidhi-and-DMK.jpg)
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கூறியுள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின் அதுபற்றி இப்போதே முடிவெடுப்பது சரியாக இருக்காது என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பின்னர் போட்டியிட வாய்ப்புள்ளது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக திமுக நிகழ்வுகளில் அதிகமாக பங்கெடுத்து வருகிறார். இதனால் அவர் விரைவில் தேர்தலில் களமிறக்கப்படலாம் என கிசுகிசுவாக பேசப்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், திமுகவில் அடிப்படை உறுப்பினராக உள்ள நான் நடிகராகவும், முரசொலியின் நிர்வாக இயக்குனராகவும் இருப்பதால் பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள். இதனால் நான் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வதந்தி பரவுகிறது. முன்னதாக அப்பா கொளத்தூர் தொகுதியில் நின்றபோது நான் அவரது ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்கப் போவதாக வதந்தி கிளப்பினார்கள்.
இப்போதும் அதுபோல சொல்லி வருகிறார்கள். எனக்கு எம்எல்ஏ போன்ற பதவிகளில் விருப்பமில்ல்லை. அதேநேரம் அதுபற்றி இப்போதே முடிவெடுக்கவும் முடியாது என கூறியுள்ளார் உதயநிதி. அதேநேரம் அதுபற்றி இப்போதே முடிவெடுக்கவும் முடியாது என உதயநிதி கூறியுள்ள வார்த்தை அவரது தேர்தல் போட்டி பின்னர் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.