தமிழ்நாடு
மோடி, எடப்பாடியை மக்கள் விரட்டியடித்துவிட்டார்கள்; இன்னும் ஒரு விக்கெட்தான்: உதயநிதி அதிரடி பிரச்சாரம்!
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் தான் இங்கு பிரதான போட்டியாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்தியா முழுவதும் மோடியை பிரதமராக்க வாக்களித்திருந்தாலும் பாஜகவால் தமிழகத்தில் வெற்றிபெறமுடியவில்லை. அந்த அளவுக்கு மோடியையும் எடப்பாடியையும் மக்கள் விரட்டியடித்துவிட்டார்கள். இன்னும் ஒரு விக்கெட்தான். வேலூர் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிடுபவர் டெபாசிட் வாங்கக் கூடாது என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, இன்னும் 2 அல்லது 6 மாதத்தில் சட்டமன்றத்திற்கு தேர்தல் வரப்போவது உறுதி என்று தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஈடுபடும் முதல் தேர்தல் பிரச்சாரம் இதுவாகும்.