தமிழ்நாடு
டெல்லியில் ஒரு அமாவாசை, தமிழகத்தில் ஒரு அமாவாசை: உதயநிதி
டெல்லியில் ஒரு அமாவாசை இருக்கிறது என்றும் தமிழகத்தில் ஒரு அமாவாசை இருக்கிறது என்றும் இந்த இரண்டு அமாவாசைகளையும் அகற்ற வேண்டும் என்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக கருத்துக்கணிப்புகளுக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தாங்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் என்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவருடைய பிரச்சாரத்திற்கும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்தபோது ’டெல்லியில் ஒரு அமாவாசை இருக்கிறது, தமிழகத்திலும் ஒரு அமாவாசை இருக்கிறது. இந்த இரண்டு அமாவாசைகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்’ என பேசினார். இதனை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.