தமிழ்நாடு
சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது!
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் அனுமதியுடன் புதிய குடியுரிமை மசோதா அமலுக்கு வந்துள்ளது.
இந்த புதிய குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
அப்போது குடியுரிமை திருத்த மசோதாவின் நகல் எரிக்கப்பட்டதை அடுத்து, திமுக இளைஞர்கள் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.