தமிழ்நாடு
மோடியையும், பழனிசாமியையும் செல்லாக் காசாக்க வேண்டும்: உதயநிதி
![Udhayanidhi-Stalin-And-Amy-Jackson-Latest-Photo-Stills-From-Gethu-17 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/Udhayanidhi-Stalin-And-Amy-Jackson-Latest-Photo-Stills-From-Gethu-17.jpg)
பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் செல்லாக்காசாக வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கும் திமுக இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும் என்ற காரணத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் இந்த முறை ஆட்சியை பிடித்தால் மட்டுமே தொண்டர்களை உற்சாகப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து அதே நேரத்தில் அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட்டு வருகிறது. குறிப்பாக இந்த முறை தேர்தல் பிரச்சார களத்தில் உதயநிதி ஸ்டாலின் இறங்கி கலக்கி வருகிறார். அவர் பேசும் ஒவ்வொரு மேடைகளிலும் ஆவேசமாக பேசி வருகிறார் என்பதும் அவருடைய பேச்சுக்கு ஏராளமான ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நெல்லையில் இன்று உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பிரதமர் மோடியையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் செல்லாக்காசாக வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு வர வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி தராத பிரதமர் மோடியையும் அவரை ஆதரிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்யும் செல்லாக்காசாக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.