சினிமா செய்திகள்

‘முதல் முறையாக ஐந்து கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன்’: உதயநிதி ஸ்டாலின்

Published

on

மாறன் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் மார்ச் 17 அன்று வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள சந்திப்பு நடைபெற்றது.

இதில் நடிகர் உதயநிதி பேசியதாவது, “என்னுடைய கரியரிலேயே நான்கு வருடங்களுக்கும் மேல் எடுத்தப் படம் இதுதான். 2018 இறுதியில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் பார்த்து மாறனுக்கு வாழ்த்தினேன்.

Udhyanidhi in Kannai Nambathey

முதலில் அவர் சொன்னது லவ் ஸ்டோரி. ஆனால், அப்போது எனக்கு க்ரைம் த்ரில்லர் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்தப் படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் இருந்தது.

அதை எல்லாம் கடந்து இப்போது வந்திருக்கிறது. பாடல், இசை அனைத்துக்கும் வாழ்த்துகள். இதுவரை எந்தப் படத்திலும் செய்யாத முயற்சியாக ஐந்து கெட்டப்புகளில் வருகிறேன்.

நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன், மாமன்னன் என அனைத்து படப்பிடிப்புகளிலும் வந்து நிற்பார் மாறன். அவ்வளவு தடைகள் தாண்டி எடுத்துள்ளார். இரவு தான் படப்பிடிப்பு நடத்தினோம். 2002-ல் கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த்துக்கு கொடுக்க வேண்டிய என்னுடைய பத்திரிக்கையை நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொடுத்தேன்.

அப்போதிருந்தே எங்களுடைய நட்பு தொடர்கிறது. பிரசன்னா பேசும்போது நான் ஒரே படத்தில் அமைச்சரானேன் என்று சொன்னார். உண்மையில், உழைத்துதான் வந்தேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். ஆத்மிகா காலேஜ் படிக்கும்போது இந்தப் படத்திற்குள் வந்தார். மாறன் உழைப்புக்கு படம் வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் நன்றி”.

Trending

Exit mobile version