தமிழ்நாடு

தந்தையின் முன் சிரித்து கொண்டே நேர்காணலில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

Published

on

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக நேர்காணல் நடைபெற்று வருகிறது என்பதும் திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்றும் ஆ.ராஜா, டிஆர் பாலு, பொன்முடி உள்ளிட்டவர்கள் இந்த நேர்காணலை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே திமுக சார்பில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்து இருந்த நிலையில் அவர் இன்று நேர்காணலில் கலந்து கொண்டார். தந்தையின் முன் சிரித்துக்கொண்டே அவர் நேர்காணலில் நின்றுகொண்டே கேள்விகளுக்கு பதிலளிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட மாட்டார் என சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில் தற்போது அவர் நேர்காணலில் கலந்து கொண்டிருப்பதால் போட்டியிடுவது உறுதி என்று திமுக தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும் உதயநிதி ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக குஷ்பு இந்த தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த தொகுதியில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version