தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி காப்பாற்றிய இளைஞர் உதயா உயிரிழப்பு!

Published

on

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மரம் விழுந்ததால் படுகாயமடைந்த உதயா என்ற இளைஞர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் என்பதும் அவர் இறந்து விட்டார் என்று அனைவரும் நினைத்த நிலையில் அவர் உயிருடன் இருப்பதை அறிந்த டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவரை தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உதயா என்ற இளைஞரை தோளில் தூக்கி சென்ற காவல் ஆய்வாளரின் ராஜேஸ்வரி குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது குறிபிடத்தக்கது என்பதும் அதுமட்டுமின்றி இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உயிருக்கு போராடிய உதயா என்பவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைவரையும் பெரும் சோகத்திற்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version