சினிமா செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர்!

Published

on

ஐக்கிய அரபு எமிரேட் நாடு முதல் முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு கோல்டன் விசா வழங்கி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு எமிரேட் நாடு இந்திய திரையுலக நட்சத்திரங்கள் சிலருக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், சஞ்சய்தத் போன்ற நடிகர்களுக்கும், மீரா ஜாஸ்மின், ஊர்வசி ரெளட்டாலா உள்ளிட்ட ஒரு சில நடிகைகளுக்கும், பாடகி சித்ரா உள்ளிட்ட ஒருசிலருக்கும் கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்பதும் இந்த விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் குடிமகன் போகவே கௌரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதல் முறையாக தமிழ் நடிகர் பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசா வழங்கி உள்ளது. இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவதுள் பார்த்திபன்: கோல்டன் விசா இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது.

இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள்.VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது.

நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

உலகப்புகழ் திரைப்படவிழா
நடத்தும் துபாய் அமீரகத்தின்
தங்கக்குடியுரிமையை (Golden Visa) இந்திய நடிகர்களில்
மம்மூட்டி,மோகன்லால்
சஞ்சைதத் வரிசையில்
உங்களுக்கு தந்தது மகிழ்ச்சி.

இது ஈடில்லா
ஒட்டக வளர்ச்சி
பாலைவனத்தில்
நீருக்கு
@rparthiepan
பெருமை
ஈச்சமரப் பூக்கள் தூவி
வாழ்த்துகிறேன்

 

 

Trending

Exit mobile version