கிரிக்கெட்

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய அணி!

Published

on

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதும் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. யாஷ் துல் 110 ரன்களும், ஷைக் ரஷீத் 94 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதன் காரணமாக 41.5 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பதும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மீண்டும் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version