தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் சுரங்கப்பாதைகள் மூடல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட சுரங்க பாதைகளில் வெள்ளநீர் புகுந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, சுரங்க பாதைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மூன்றாவது காற்றழுத்த தாழ்வு மையம் வங்க கடலில் தோன்றி உள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கனமழை காரணமாக சென்னையில் மீண்டும் இரண்டு சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்து உள்ளதை அடுத்து அந்த சுரங்க பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தி நகரில் சென்னை தி நகரில் உள்ள மேட்லி சுரங்க பாதையும், ரங்கராஜபுரம் சுரங்கப் பாதையிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த 2 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், விரைவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version