தமிழ்நாடு
திமுக ஆட்சிக்கு வர காரணம் இரண்டு ‘கல்: அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் பேச்சு!
திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இரண்டு கல் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புமணி அவர்கள் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வர காரணம் இரண்டு கல் என்றும் அவற்றில் ஒரு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்த மனுக்கள் என்றும் இன்னொன்று இளைஞரணி தலைவர் உயர்த்திப் பிடித்த செங்கல் என்றும் கூறினார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஒரே ஒரு செங்கலை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக பிரச்சாரம் செய்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார் என்பதும் அவரது இந்த பேச்சுக்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.