உலகம்

ஏர்போர்ட்டுக்குள் குதித்து விமானத்தை திருடிய சிறுவர்கள்.. பறந்து எஸ்கேப் ஆனதால் பரபரப்பு

Published

on

நியூயார்க்: அமெரிக்காவில் இரண்டு பள்ளி சிறுவர்கள் விமானம் நிலையம் ஒன்றில் திருட்டுத்தனமாக புகுந்து விமானத்தை கடத்தி சென்று இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் உட்டா நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக ஹாலிவுட் படங்களில் விமான நிலையத்திற்குள் புகுந்து விமானத்தை திருடும் சம்பவங்கள் நிறைய நடக்கும்.

இந்த நிலையில் உட்டா பகுதியின் ஜென்சன் என்று இடத்தில் உள்ள தனியார் விமான நிலையத்திற்கு இரண்டு சிறுவர்கள் வந்துள்ளனர். இரண்டு பேரும் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது, 14 வயது நிரம்பிய பள்ளி சிறுவர்கள். அந்த விமான நிலையத்திற்கு இவர்கள் டிராக்டர் மூலம் வந்துள்ளனர்.

அதிகாலை 4 மணிக்கு வந்த இவர்கள் இருவரும், டிராக்டரை ஓரமாக நிறுத்திவிட்டு, பின் விமான நிலையத்திற்குள் எகிறி குதித்துள்ளனர்.

அதோடு இல்லாமல் அங்கிருந்த சிறிய ரக விமானம் ஒன்றை எடுத்து இயக்கி உள்ளனர். எதை பார்த்துக் கற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை, மிகச்சரியாக விமானத்தை இயக்கி பறந்துள்ளனர்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version