தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெட்ரோல் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்ட இருவர்: என்ன காரணம்?

Published

on

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சாந்தி. இவருக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆகிய இருவரையும் பிரிந்துவிட்ட நிலையில் மூன்றாவதாக வடபழனி பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென ஏற்கனவே பிரிந்த கணவர் ஒருவருடன் சாந்தி தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த மூன்றாவது காதலன் நேற்றிரவு சாந்தி தனது பணிகளை முடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டார்.

பின்னர் அவர் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி கொண்டு தன்னையும் தீ வைத்து கொண்ட ஆறு இருவரும் திடீரென உயிரோடு எரிந்து கொண்டிருந்ததால் பேருந்து நிலையத்தில் அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த கோயம்பேடு காவல் துறையினர் விரைந்து வந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கோயம்பேடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர் அதில் முத்துவை உயிரோடு கொளுத்திய தானும் தன்னை வரித்துக் கொண்டவர் பெயர் முத்து என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version