தமிழ்நாடு

சென்னையில் 2 பெண்கள் கல்லூரிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

Published

on

சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ், குயின் மேரிஸ் உள்பட பல பெண்கள் கல்லூரி இருக்கும் நிலையில் மேலும் இரண்டு புதிய பெண்களுக்கான கலைக்கல்லூரிகள் கட்டப்படும் என அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலை துறை சார்பில் சென்னையில் இரண்டு புதிய பெண்கள் கலை கல்லூரிகள் இந்த ஆண்டே தொடங்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு இதனை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த ஆண்டு சென்னையில் இரண்டு புதிய பெண்கள் கலை கல்லூரிகள் கட்டப்படும் என்றும் அடுத்த கல்வி ஆண்டில் பெண்கள் இந்த கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கு தற்போது கல்லூரிகளில் சீட் கிடைப்பது கடினமாக இருக்கும் நிலையில் மேலும் சில பெண்களுக்கான தனி கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது சென்னையில் மேலும் இரண்டு புதிய கலை கல்லூரிகள் பெண்களுக்காக தொடங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version