இந்தியா
3வது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண் குழந்தைகள்: வாகனங்களுக்கு தீ வைத்து மக்கள் போராட்டம்!
பீகார் மாநிலத்தில் 3வது மாடியில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகவும் அந்தப் பகுதி வழியாக வந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்திலுள்ள பாட்னா என்ற பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் தூக்கி எறியபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெண் குழந்தையை வெறுத்த ஒரு தம்பதியினர் தான் அந்த குழந்தைகளை தூக்கி எறிந்து தாக கூறப்படுகிறது.
மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது என்பதும் இன்னொரு குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெண் குழந்தையை தூக்கி எறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த பகுதி இதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் அந்த பகுதி வழியாக வந்த வாகனங்கள் தீவைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பெண் குழந்தைகளை தூக்கி எறிந்த தம்பதிகளை கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.