இந்தியா

#Breaking: பிரபல டிவி சேனல்களுக்கு தடை!

Published

on

டெல்லி வன்முறைச் சம்பவங்களை ஒளிபரப்பு செய்ததற்காகக் கேரளாவை சேர்ந்த இரண்டு பிரபல தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிஏபி, சிஏஏ, என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகவே மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதிலும் சென்ற சில வாரங்களாக, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைகளும் நடைபெற்று வருகிறது. அது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் டெல்லி கலவரக் காட்சிகளை ஒளிபரப்பி, ஒரு பக்கத்திற்கு சாதமாக செயல்பட்டதற்காக ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் இந்த தடை வெள்ளிக்கிழமை 7:30 மணி முதல் மார்ச் 8-ம்தேதி இரவு 7: 30 நேரம் என 48 மணி நேரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version