தமிழ்நாடு

சூர்யா அலுவலகத்தில் வந்திறங்கிய ஜல்லிக்கட்டு காளைகள்: சூர்யாவின் வேற லெவல் பயிற்சி!

Published

on

’வாடிவாசல்’ படத்திற்காக சூர்யாவின் அலுவலகத்திற்கு இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கியதாக வெளி வந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் சற்று முன் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் தத்ரூபமாக ஜல்லிக்கட்டு காட்சிகள் இருக்க வேண்டும் என்பதற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் சில மாதங்கள் சூர்யா பழக முடிவு செய்துள்ளார். இதற்காக சூர்யாவின் அலுவலகத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் தற்போது வந்திருப்பதாகவும் அந்த காளைகளுடன் சில நாட்கள் சூர்யா பயிற்சி எடுத்த பின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆடுகளம் திரைப்படம் படமாக்கப்பட்டபோது தனுஷின் வீட்டில் நான்கு சேவல்கள் வந்து இறங்கியதும் அந்த சேவல்களுடன் தனுஷ் பழகிய பின்னர் தான் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் கூறப்பட்டது. அதேபோல் தற்போது சூர்யாவின் அலுவலத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சூர்யா அந்த காளைகளுடன் பழகி வேற லெவல் பயிற்சி எடுக்க உள்ளார் என்பதும் ஒரு காட்சிகள் கூட கிராபிக்ஸ் அல்லது டெக்னிக் காட்சிகள் இருக்காது என்றும் இந்த படத்தை பார்க்கும் போது நிஜ ஜல்லிக்கட்டை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version