தமிழ்நாடு
மாணவிகளை கடத்தி பாலியல் தொழில்: பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை!
![Case - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/Case.jpg)
கடலூர் அருகே பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மேலும் 16 குற்றவாளிகளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அதில் 16 நபர்கள் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த 16 குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளை கடத்திய பாதிரியார் அருள்தாசுக்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆனந்த்ராஜ், பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனை, செல்வராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை, கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், ஃபாத்திமா, மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரிஜாவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐந்து பேருக்கும் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிரியார் அருள்தாசுக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனையுடன் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.