இந்தியா

இந்தியாவில் ஒமிக்ரானில் ஒரே நாளில் இருவர் பலியா? அதிர்ச்சி தகவல்

Published

on

இந்தியாவில் ஒமிக்ரான் வைரசுக்கு ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவினாலும் இதுவரை இன்னும் ஒருவர் கூட உயிர் இழக்காமல் இருந்தது ஆறுதலை அளித்தது.

ஆனால் இன்று ஒரே நாளில் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் ஒமிக்ரான் வைரஸ்க்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 50 வயது நபர் சமீபத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் 73 வயதான நபர் ஒருவர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பிய நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். ஒமிக்ரான் பாதிப்புக்கு உள்ளான இருவர் இன்று ஒரே நாளில் உயிரிழந்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version