இந்தியா

ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: ராஞ்சி மருத்துவமனைகளின் அவலம்!

Published

on

இந்தியாவில் நேற்று மட்டும் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இனி வரும் நாட்களில் இதை விட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தினமும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் அளவுக்கு அதிகமாக கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒரு சில மருத்துவமனைகளில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இருவரை படுக்க வைத்து சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ராஞ்சியில் உள்ள மருத்துவ அறிவியல் மையத்தில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் ஒரே படுக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பயன்படுத்தி வரும் காட்சிகளின் புகைப்படங்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், உடனடியாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை மாநில மத்திய அரசுகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version