இந்தியா
ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: நிலைமை மோசமாகும் மகாராஷ்டிரா!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று நாக்பூர். இந்த நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 5000ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாக்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகமாக உள்ளது இதனால் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் படுக்க வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்