Connect with us

தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கு: சயன், மனோஜ் டெல்லியில் அதிரடி கைது!

Published

on

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என தெகல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்யூஸ் குற்றம் சாட்டினார். இதில் எடப்பாடி பழனிச்சாமி தான் இந்த கொலைகளுக்கு காரணம் என பேட்டியளித்த சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் டெல்லியில் நேற்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கான பின்னணி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பேசிய தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கொடநாட்டில் நடந்த கொலைகளின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அந்த பேட்டியில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களும் வாக்குமூலம் அளித்தனர். இது அதிமுக வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். அதில், கொடநாடு எஸ்டேட் சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், இவர்களுக்கு பின்புலமாக உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

அதன்படி முதல்வர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து மேத்யூஸ், சயன், மனோஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த சென்னை போலீஸார் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையை டெல்லி அனுப்பினர். அவர்கள் டெல்லி போலீசார் உதவியுடன் நேற்று மாலை சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்காக சென்னை கொண்டுவரப்படுகிறார்கள்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!