உலகம்

திடீரென முடங்கியது டுவிட்டர்: அதிர்ச்சியில் மில்லியன் கணக்கான பயனாளிகள்!

Published

on

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான டுவிட்டர் திடீரென சில மணி நேரம் முடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்கள் அவ்வப்போது திடீரென முடங்கும் என்பதும் அதன் காரணமாக அதன் பயனாளிகள் கடும் அதிருப்தி அடைவார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். மற்ற சமூக வலைதளங்கள் முடங்கும்போது, டுவிட்டர் மூலம்தான் அது பொது மக்களுக்கு தெரியவரும். ஆனால் நேற்று இரவு திடீரென டுவிட்டர் சமூக வலைதளமே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியதால் அதன் மில்லியன் கணக்கான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

திடீரென டுவிட்டர் இணையதளம் முடங்கியது குறித்து தகவல் அறிந்ததும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அது குறித்து ஆய்வு செய்ததாகவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் டுவிட்டர் இணையதளம் முடங்கியது என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து சில நிமிடங்களில் ட்விட்டர் மீண்டும் இயங்கியது என்றும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக டுவிட்டர் இணையதளம் முடங்கியதற்கு டுவிட்டர் நிர்வாகம் பயனாளிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ட்விட்டர் இணையதளங்கள் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version