Connect with us

உலகம்

நீதிமன்றம் செல்கிறார்களா வேலைநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் ஊழியர்கள்.. சிக்கலில் எலான் மஸ்க்

Published

on

வேலை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் ஏற்கனவே பங்குச்சந்தையில் தனது சொத்து மதிப்பை இழந்து உள்ள எலான் மஸ்க் அவர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னணி தொழில் அதிபர் எலான் மஸ்க் அவர்கள் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார் என்பது தெரிந்ததை. இதனை அடுத்து அவர் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ உள்பட பலரை வேலை நீக்கம் செய்தார் என்பதும் வேலை நீக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிர்வாக காரணத்திற்காக மட்டுமின்றி செலவை குறைக்கவும் தன்னுடைய உத்தரவுகளை மதித்து உறுதிமொழி எடுக்காத ஊழியர்களையும் அவர் அடுத்தடுத்து வேலை நீக்கம் செய்தார். அதுமட்டுமின்றி தற்போது பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் மிகவும் கடினமான வேலை செய்து வருவதாகவும் நீண்ட நேரம் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்கான அர்ப்பணிப்பு உறுதி மொழியில் அவர் அனைத்து ஊழியர்களிடம் கையெழுத்து வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியை இழந்த ஊழியர்கள் சிலர் கிளாஷ் ஆக்சன் வழக்கின் மூலம் உரிமைக்கோரல்களை நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். ஆனால் இந்த மனுக்களை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம் கிளாஸ் ஆக்சன் வழக்கு மூலம் உரிமைக்கோரல்களை தொடர முடியாது என்றும் வேண்டுமானால் தனிப்பட்ட நடுவர் மூலம் நீதிமன்றத்தில் செல்லலாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனை அடுத்து வேலை இழந்த ட்விட்டர் ஊழியர்கள் தனிப்பட்ட நடுவர் மூலம் மனுக்களை தாக்கல் செய்து வருவதால் இந்த அனைத்து வழக்கங்களையும் சந்திக்க வேண்டிய நிலையில் எலான் மஸ்க் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த சில வாரங்களாக எலான் நிறுவனங்களின் மதிப்பு பங்குச் சந்தையில் சரிந்து வருவதால் அவர் ஏராளமான பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை இழந்து உள்ளார். இந்த நிலையில் அவர் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் வழக்கையும் சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!