உலகம்

சிபிஐ இயக்குனரை தொடர்ந்து சிபிஐ சிறப்பு இயக்குனர் மீதும் நடவடிக்கை!

Published

on

டெல்லி: சிபிஐ இயக்குனரின் நீக்கத்தை தொடர்ந்து தற்போது சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ அமைப்பில் நிலவி வந்த பிரச்சனை ஒரு வழியாக பெரிய போருக்கு பின் முடிவிற்கு வந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். சிபிஐ இயக்குனாராக இருந்த அலோக் வெர்மாவிற்கும், சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவிற்கும் இடையே பெரிய மோதல் நிலவி வந்தது.

இதையடுத்து இவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு எதிராக அலோக் வெர்மா வழக்கு தொடுத்து இருந்தார்.

இதில் அலோக் வெர்மாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஆனாலும் பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி கூடி சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டார். நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

seithichurul

Trending

Exit mobile version