தமிழ்நாடு
சித்ரா மரண வழக்கு.. மற்ற நடிகர்களிடம் கோட்டாட்சியர் தீவிர விசாரணை!
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக சக நடிகர் நடிகைகளிடம் கோட்டாட்சியர் இன்று விசாரணை நடத்துகிறார்.
சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தற்கொலை என்று போலீசார் கூறிவந்தாலும், அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சித்ராவின் செல்போன் மெசேஜ்கள், அழைப்புகள் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு, சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேமந்த கைது செய்யப்பட்டார். மேலும், சித்ராவின் பெற்றோரிடமும் போலீசார், ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சித்ராவுடன் மிக நெருக்கமான சக நடிகர்கள், நடிகைகளிடம் ஆர்டிஓ அதிகாரி இன்று விசாரணை நடத்துகிறார். இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.