சினிமா செய்திகள்
தூத்துக்குடி சம்பவத்தை பேசப் போகிறதா உறியடி 2?
சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள உறியடி 2 படத்தின் ஸ்நீக் பீக் வெளியாகி வைரலாகி வருகிறது.
உறியடி முதல் பாகத்தை இயக்கி நடித்த விஜயகுமார், இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கி நடித்துள்ளார்.
சாதி வெறி எப்படி அரசியலாக்கப்படுகிறது என்றும், அரசியல் எப்படி சாதியை பயன்படுத்தி மக்களை கூறுபோடுகிறது என்பதை பற்றியும் அதில், மாணவர்கள் சிக்கித் தவிக்கும் போராட்டத்தையும் முதல் பாகமாக எடுத்து பலரது பாராட்டுக்களையும் அள்ளினார்.
தற்போது வெளியாகியுள்ள ஸ்நீக் பீக்கில், ஒரு காப்பர் கம்பெனியை தேர்தலுக்கு பின்னர் திறந்து கொள்ளலாம், இப்போது திறந்தால், தேர்தலில் ஜெயிக்க முடியாது என அரசியல்வாதி ஒருவர், அந்த நிறுவன முதலாளியிடம் பேசும் அரசியல் வசனங்கள் அடங்கிய ஸ்நீக் பீக் வெளியாகியுள்ளது.
இது சமீபத்தில் நடந்த தூத்துக்குடி சம்பவத்தை நினைவுப் படுத்துவதாக அமைந்துள்ளது.