தமிழ்நாடு
இன்று ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பள்ளிகள் கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை என்பதும் தினந்தோறும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தற்போது குறைந்து உள்ளது என்பதும் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும், நாளை முதல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.