தமிழ்நாடு

ஒரே நேரத்தில் 2 ஆண்களை திருமணம் செய்த பெண்: ஒருவர் தலை துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு!

Published

on

ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை திருமணம் செய்த பெண் ஒருவரின் இரண்டு கணவர்களில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளாத்திகுளம் அருகே உள்ள குமரகிரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரியராகவன். 31 வயதான இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று புதன்கிழமை காலையில் வழக்கம் போல சூரியராகவன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது டிவியுடன் வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் பழுதுபார்க்க கொடுத்துவிட்டு காத்திருந்தார். அப்போது திடீரென சூரிய ராகவன் மீது மிளகாய் பொடியை எடுத்து வீசி நிலைகுலைய வைத்து அந்த இளைஞனை தான் எடுத்து வந்த கறி வெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் சூரியராகவன் தலை துண்டிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சூரிய ராகவன் சடலத்தை எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் விளாத்திகுளம் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்,
விசாரணையில் சூரியராகவனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது விளாத்திகுளம் அடுத்த சோழபுரத்தை சேர்ந்த 22 வயதான ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது. நான்கு மணி நேரத்தில் திருச்செந்தூரில் வைத்து ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் காதல் விவகாரத்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது,

ஆனந்தராஜ் படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான மகாலட்சுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் வேலைக்காக ஆனந்தராஜ் துபாய் சென்று உள்ளார் இந்த இடைவெளியில் படுகொலை செய்யப்பட்ட சூரியராகவன் உடன் மகாலட்சுமிக்கு இரண்டாவதாக காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே காதலியை பிரிய மனமில்லாத ஆனந்தராஜ் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி மகாலட்சுமியை திருச்செந்தூர் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சூரியராகவன் உடனான காதல் விவகாரம் மகாலட்சுமி வீட்டாருக்கும் தெரிய வந்ததை அடுத்து இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதை காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சூரியராகவன் – மகாலட்சுமி இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தன்னை அலைபாயுதே ஸ்டைலில் ரகசிய திருமணம் செய்து ஏமாற்றி விட்டு வேறு சாதியை சேர்ந்தவரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், சூரியராகவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். தங்கள் வீட்டில் டிவி பழுதாகி இருப்பதாக கூறி டிவியை தூக்கி கொண்டு அவரது கடைக்கு சென்ற ஆனந்தராஜ், சூரியராகவன் சென்று கவனத்தை திசை திருப்பி அவரது தலையை துண்டித்து கொலை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் துண்டித்த பிறகு தலையை கையில் வைத்து தூக்கி போட்டு விளையாடி ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்து இருவரையும் திருமணம் செய்த மகாலட்சுமி, ஒரு கணவர் சிறையிலும் இன்னொரு கணவர் உயிரோடு இல்லாததையும் அறிந்து கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version