தமிழ்நாடு
10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு: அட்டவணை விபரம்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உறுதி செய்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என தேர்வு துறை அறிவித்து அதன் அட்டவணையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எந்தவித நேரடித் தேர்வு எழுதாத மாணவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த திருப்புதல் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாகவே பள்ளி திறக்கப்பட்டதால் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் திருப்புதல் தேர்வுகளில் கேள்விகள் இடம் பெறும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 27ம் தேதி வரையிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 28ம் தேதி வரையிலும் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும். அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21 முதல் 26 ஆம் தேதி வரையிலும் பன்னிரண்டாம் வகுப்பு மார்ச் 21 முதல் 29 தேதி வரையிலும் இரண்டாம் திருப்புதல் நடைபெற உள்ளது
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த திருப்புதல் தேர்வு நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள 2 திருப்புதல் தேர்வு குறித்த அட்டவணை இதோ: