Connect with us

தமிழ்நாடு

ஊரெல்லாம் தினகரன் பேச்சுதான்: அமமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறிய தேர்தல் ஆணையம்!

Published

on

இன்று பிற்பகல் 3 மணியுடன் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. ஆனால் இந்த நிமிடம் வரை டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்ட அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என மல்லுக்கட்டி வருகிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தில் இந்த அனுகுமுறை பல்வேறு சந்தேகத்தை மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினரிடமும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள தமாகவுக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் எதிர் கட்சிகளிடம் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. அதிமுகவின் ஒரு அணியினர் தான் தினகரன் தரப்பினர் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

அவர்கள் அதிமுக தங்களுக்கு தான் சொந்தம் என கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தினகரன் தரப்பினால் தங்களின் அமமுகவை பதிவு செய்ய முடியாத சூழல் உள்ளது. ஆனால் கட்சியை பதிவு செய்யாத காரணத்தை காட்டி தேர்தல் ஆணையம் அவர்களுக்கு குக்கர் சின்னத்தை கொடுக்க மறுக்கிறது. இது உச்ச நீதிமன்றத்தையே எரிச்சலாக்கியுள்ளது.

அதிமுகவின் ஒரு அணியாக உள்ள தினகரன் தரப்பினர் தற்போது தேர்தலில் போட்டியிட்டு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடுவதையே திறம்பட செய்துவருகிறது தேர்தல் ஆணையம். குக்கர் சின்னத்தை பெற தினகரன் செய்து வரும் சட்டப்போராட்டம் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தினகரன் தரப்புக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பின்னணியில் இருந்துகொண்டு குறிப்பிட்ட சில கட்சிகள் தினகரனுக்கு நெருக்கடி கொடுக்கிறது என சாமானிய மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடுகள் மூலம் டிடிவி தினகரனின் அமமுக மறைமுகமாக ஆதாயம் அடைந்து வருகிறது. இதன் மூலம் அமமுக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறது.

அமமுகவுக்கு இலவச விளம்பரத்தை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துவிட்டது. இந்த சூழலில் தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அவை இரண்டுமே தினகரன் தரப்புக்கு சாதகமாகத்தான் அமையும். தேர்தல் ஆணையத்தையும், பின்னணியில் உள்ள அரசியல் கட்சியையும் எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி குக்கர் சின்னத்தை வென்றெடுத்தார் தினகரன் என்ற நல்ல இமேஜ் இதன் மூலம் உருவாகும். அல்லது தேர்தல் ஆணையத்தாலும், பின்னணியில் உள்ள அரசியல் கட்சிகளாலும் பழிவாங்கப்பட்டுள்ளார் டிடிவி தினகரன் என்ற அனுதாப அலையும் இதன் மூலம் உருவாகும். தேர்தலுக்கு முன்னரே தினகரனின் வெற்றி இதன் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!