தமிழ்நாடு

இடைத்தேர்தல் வெற்றிக்கு மீண்டும் சிசிடிவி வீடியோவை வெளியிடுமா தினகரன் தரப்பு?

Published

on

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் வெற்றிக்காக அவர்கள் இந்தமுறை சிசிடிவி வீடியோ ஒன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தினகரன் தரப்பை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்பது தொடர்பாக பேசியதாக கூறி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பு நடந்த இடத்தில் சிசிடிவி கேமர இருந்ததாகவும், அந்த ஆதாரம் தற்போது தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்த தங்க தமிழ்செல்வன் அதனை நேரம் வரும்போது வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக ஆர்கே நகர் தேர்தலுக்கு முந்தையநாள் தினகரன் தரப்பு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் தேர்தலிலும் எதிரொலித்தது.

இறுதியில் அந்த தேர்தலில் தினகரன் மாபெரும் வெற்றியை பெற்றார். அதே போல இந்த முறையும் இடைத்தேர்தலில் வெற்றி பெற தினகரன் தரப்பு ஓபிஎஸ் சந்தித்த சிசிடிவி வீடியோவை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தான் தங்க தமிழ்செல்வன் நேரம் வரும்போது அதனை வெளியிடுவோம் என கூறியுள்ளார். இது அதிமுக தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version