தமிழ்நாடு
குற்றாலத்தில் அதிர்ச்சியில் தினகரன் ஆதரவாளர்கள்.. பிளவா?
![2 (6) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/2-6-1.jpg)
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கமும் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இவர்கள் எல்லோரும் இந்த வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்வார்களா என்று கேள்வி எழும்பி இருக்கிறார்கள். பெரும்பாலும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் தேர்தலை சந்திக்க தயாராகி இருப்பதாகவே தகவல்கள் வருகிறது.
அதுமட்டுமில்லாமல், தினகரன் தரப்பில் இதனால் பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. தினகரனின் முக்கியமான சில ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். இதனால் அவர்கள் தினகரனுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது.