தமிழ்நாடு

தந்தையின் தொகுதியிலேயே ஓடிஒளியும் ஸ்டாலின்: டிடிவி தினகரன் விளாசல்!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை ஒத்திவைக்க திமுக முயற்சி செய்ததாக அதிமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் நிலவி வருகிறது. முன்னதாக திமுக நடத்திய ஊராட்சி சபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதனையடுத்து நேற்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தேர்தலை கண்டு பயந்து ஒதுங்கும் கட்சி திமுக. தனது தந்தை தொகுதியிலேயே ஓடிஒளியும் ஸ்டாலின், ஜெயலலிதா மரண மர்மத்திற்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது என்றார்.

Trending

Exit mobile version