தமிழ்நாடு

கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி மரண அடி வாங்குவார்: தினகரன் ஆவேசம்!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கொங்கு மண்டலத்தில் மரண அடி வாங்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செல்லும் இடமெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தினகரன் நேற்றும் இன்றும் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது பல இடங்களில் திறந்த வேனில் நின்றபடியே பேசும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் தன் சொந்த மக்களுக்கு அவர் கேடு செய்து வருகிறார். எம்ஜிஆர் முதல் அம்மா காலம் வரை கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை. ஆனால் தற்போது நிலமை மாறிவிட்டது.

எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கம்பெனியால்தான் இந்த நிலைமை. கொங்கு மண்டல மக்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையில் இருக்கும், பாஜகவின் அடிமையாய் மாறிப்போன அதிமுகவுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுக்க காத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு பின்னர் எடப்பாடியின் ஆட்சி என்ற கம்பெனி தானாக கலையும் என்றார் ஆவேசமாக.

seithichurul

Trending

Exit mobile version