தமிழ்நாடு
வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம்: எடப்பாடியை விளாசும் டிடிவி தினகரன்!
![TTV Dinakaran 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/TTV-Dinakaran-1.jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்து மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதா இறந்த பின்னர் இவர்களை முதலமைச்சர் ஆக்கியது யார். உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்துவிட்டு வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்து மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றார்.
மேலும் சுயநல ஆட்சி செய்து வரும் இவர்கள் துரோகி என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்பது போல தற்போது அதர்ம அக்கிரம ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சராக இருப்பதால் எதுவேண்டுமென்றாலும் கூறலாம் என்று பேட்டி கொடுத்து வருகிறார். அவர் பேச்சை மக்கள் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். இது அமைதி புரட்சி, ஜனநாயக புரட்சியாக தேர்தல் நேரத்தில் வெளிப்படும் என்றார் டிடிவி தினகரன்.