தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கால் முதல்வருக்கு பயம், பதற்றம்: தினகரன் விளாசல்!

Published

on

கொடநாடு கொலை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வழக்கமாக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கொடநாடு கொலை விவகாரம் குறித்து தற்போது தான் பேச ஆரம்பித்துள்ளார். திருவாரூரில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன்.

அப்போது, கொடநாடு கொலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த 5 பேர் இறப்பில் சந்தேகம் உள்ளது. இதில் முதல்வர் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்வருக்கு பயம் பதற்றம் உள்ளது தெரிகிறது என்றார் தினகரன்.

மேலும், கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் தமிழக காவல்துறையினர் கைது செய்து வந்தவர்களை நீதிபதி சிறைக்கு அனுப்பமறுத்துள்ளது முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிலை கடத்தல் பிரிவு பொன்மாணிக்கவேல் கண்காணிப்பது போன்று, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் முதல்வர் மீதான வழக்கை கண்காணிக்க வேண்டும். சரியான விசாரணையை அடுத்து உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார் அதிரடியாக.

seithichurul

Trending

Exit mobile version