தமிழ்நாடு

சசிகலா தரப்பிலிருந்தால் ஓ.பி.எஸ் மீண்டும் பரதன் ஆகலாம்… டிடிவி தினகரன் சூசகம்!

Published

on

சசிகலா தரப்பைத் தேர்ந்தெடுத்தால் ஓ.பி.எஸ் மீண்டும் பரதன் ஆகலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்ற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமமுக-வின் டிடிவி தினகரன், “அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம். சசிகலா அணிக்கு ஓ.பி.எஸ் வந்தார் என்றால் அவரை நாங்கள் வரவேற்போம். ஓ.பி.எஸ் ராமன் அருகின் பரதன் ஆக இருக்க வேண்டியவர்.

ஆனால், தற்போது ராவணன் அருகில் நிற்கிறார். ஓ.பி.எஸ் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் நிச்சயமாக வரவேற்பேன். அப்படி அவர் வந்தால் மீண்டும் பரதன் ஆக நிற்கலாம். ஓ.பி.எஸ் தற்போது மனக்கசப்பில் இருக்கிறார். அவர் விரைவில் நல்ல முடிவெடுப்பார். சசிகலா தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.

வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டில் ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version