Connect with us

தமிழ்நாடு

கஜா பாதிப்பு பகுதிகளில் மக்களின் ஹீரோவான தினகரன்: அசத்தும் நிவாரண பணிகள்!

Published

on

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தன்னுடைய நிவாரண பணிகளால் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களின் ஹீரோவாக வலம் வருகிறார். அரசின் நிவாரண பணிகளை மிஞ்சும் வகையில் உள்ளது அமமுகவின் களப்பணி.

சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய கஜா புயலினால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து நிற்கின்றனர். பல கிராமங்கள் மின்சார வசதியில்லாமல் இருளில் மூழுகி கிடக்கின்றன. அரசின் நிவாரண பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருப்பதால் மக்களின் கோபம் ஆளும் தரப்பின் மீது அதிகமாக உள்ளது.

தங்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் திணறடித்து வருகின்றனர் மக்கள். ஆனால் தினகரன் தரப்பின் நிவாரண பணிகள் ஆளும் தரப்புக்கு சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டம், தொகுதி, ஒன்றியம் வாரியாக நிவாரண பொருட்களை பிரித்து அனுப்பி காலை பத்து மணிக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை செய்கின்றனர். இதனை தினகரனே நேரடியாக கண்காணித்து வருகிறார்.

துவரம்பருப்பு 2 கிலோ, எண்ணெய் 1 கிலோ, 10 கிலோ முதல் 25 கிலோ வரையில் அரிசி பை, மிகவும் நலிவடைந்த குடும்பங்களுக்கு சிறு பண உதவிகளையும் செய்து மக்களின் துயர் துடைத்து வருகிறார்கள் அமமுகவினர். கடந்த ஒரு வாரமாக டெல்டா பகுதிகளில் தீவிரமாக களப்பணி ஆற்றி வரும் தினகரன் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்லி நிவாரணப் பொருட்களை வழங்கிவருகிறார். இது மக்கள் மத்தியில் தினகரனுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. ஆனால் அரசு தரப்பு தினகரனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினகரனின் அசத்தல் நிவாரண பணிகள் மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது ஆளும் தரப்புக்கு சவாலாக உள்ளது. இதனால் தினகரனின் நிவாரண பணிகளை ஊடகங்கள் மூலம் இருட்டடிப்பு செய்யும் வேலையில் ஆளும் தரப்பு ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!