இந்தியா
சசிகலாவை சந்தித்தது ஏன்? டிடிவி தினகரன் பரபர விளக்கம்!
பெங்களூர்: பெங்களூரில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஏன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன் சேர்ந்து இன்று பெங்களூர் சிறையில் சசிகளை சந்தித்தனர். சுமார் 20 நிமிடம் இவர்கள் சசிகலாவுடன் உரையாடினார்கள்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டியில், என்னுடைய வளர்ச்சியை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆளும்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியும் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள் அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பது போல தெரியவில்லை.ஒரு சிலர் அமமுகவை விட்டு சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை.
ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சிலர் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது. 6 மாதமாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை, அதனால் பார்க்க வந்தோம். எல்லோரும் சசிகலாவை பார்க்க ஆசைப்பட்டோம் அதனால் பார்க்க வந்தோம்.