தமிழ்நாடு

ஆட்சி மாற்றத்துக்காக ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்: வாக்களித்தபின்னர் தினகரன் பேட்டி!

Published

on

தமிழகம் முழுவதும் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுவென நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி தனித்து களமிறங்கியுள்ளது. எஸ்டிபிஐ கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதியை கொடுத்துவிட்டு மற்ற அனைத்து தொகுதிகளிலும் அமமுக போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் அமமுக அதிமுகவின் வாக்குகளை பிரித்து முக்கியபங்காற்றும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான இன்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காலையிலேயே வாக்களிக்க சென்றுவிட்டார். சென்னை அடையாறில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தமிழ்நாட்டின் உரிமைகள் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஆட்சி மாற்றத்துக்காக தமிழக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version