தமிழ்நாடு
டிடிவி தினகரன் வழக்கில் திடீர் திருப்பம்: முக்கிய சாட்சி தற்கொலை!
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்க பெங்களூரை சேர்ந்த சுகேஷ் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது .
இதனை அடுத்து சுகேஷிடம் அமலாக்கத் துறைம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கோபிநாத் என்ற வழக்கறிஞர் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்தா.ர் இவர் நேற்று திடீரென மனவேதனையில் தனது வீட்டில் இருந்த குடிசையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வழக்கறிஞர் கோபிநாத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியதை அடுத்து அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.