தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலினை அவசர அமைச்சர் என விளாசிய டிடிவி தினகரன்!

Published

on

திமுகவின் சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை A1 என விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலினை அவசர அமைச்சர் என விமர்சித்துள்ளார்.

#image_title

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஜெயலலிதாவை A1-ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2-ஆகவும் கம்பி எண்ண வைத்ததும் இந்த திமுவின் சட்டத்துறைதான் என குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், திமுகவின் சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அவசர அமைச்சர், அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திமுகவினர் அம்மா அவர்களை வீழ்த்த பல்வேறு உத்திகளை எடுத்து செயல்பட்டபோதிலும், அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வரை மக்கள் மன்றத்தின் முன் தீயசக்திகளால் அவரை வெல்லமுடியவில்லை.

அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும். இன்று அதிகாரம் கிடைத்ததும் ஆணவத்தின் உச்சத்தில் இவரை போன்றோர் பேசிவருகின்றனர். ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version