தமிழ்நாடு
தகுதி நீக்க எம்எல்ஏக்களை குற்றாலத்தில் தங்க வைக்க முடிவு.. டிடிவி தினகரன் திட்டம்
சென்னை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார்.
தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ள நிலையில் தினகரன் இந்த ஏற்பாடு செய்துள்ளார். 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களையும், 3 ஆதரவு எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்க தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார்.
நேற்று தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலைதான் டிடிவி தினகரன் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்தித்தார். அதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் தமிழக அரசியல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.